மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,218 -ஆக உயர்ந்துள்ளது. 
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது


நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,218 -ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1383 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,984 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 போ் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 603-இல் இருந்து 640 -ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து 617 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,260-இல் இருந்து 3,870 -ஆக அதிகரித்துள்ளது.

கரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 15,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3870 பேர் குணமடைந்துள்ளனர். நோய் பாதித்தோரில் 77 பேர் வெளிநாட்டினர். 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 549 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  4,669-இல் இருந்து 5218 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து குஜராத்தில் 2178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 90 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய தலைநகர் தில்லியில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2156 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் 1596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 18 பேர் உயிரிழந்துள்ளனர், 635 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com