புல்வாமா: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள், அவர்களது கூட்டாளி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவின் கோரிபோரா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கூட்டாளி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.
அவந்திபோராவின் கோரிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.