சீனாவிடமிருந்து வாங்கிய விரைவு பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதை துரிதமாகக் கண்டறிவதற்காக சீனாவின் இரண்டு நிறுவனங்களிடமிருந்து விரைவு பரிசோதனைக் கருவிகளை இந்தியா கொள்முதல் செய்தது.
ஆனால் இந்த கருவிகள் சரியாகச் செயல்படவில்லை என்றும் துல்லியத்தன்மை இல்லை என்றும் ராஜஸ்தான் மாநிலம் ஐசிஎம்ஆர்-இடம் புகார் அளித்தது. இந்தப் புகாரையடுத்து, கருவிகளின் தரம் குறித்து ஐசிஎம்ஆர் 3 மாநிலங்களிடம் ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் அடுத்த 2 நாள்களுக்கு விரைவு பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளிடம் ஐசிஎம்ஆர் கடந்த 22-ஆம் தேதி அறிவுறுத்தியது.
இந்த நிலையில், சீனாவிடமிருந்து வாங்கிய விரைவு பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.