ஆந்திரத்தில் கரோனாவுக்கு பாஜக தலைவர் மரணம்

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு காரணமாக பாஜக தலைவர் பிடிகொண்டலா மனிகைலா ராவ் மரணமடைந்தார். 
பிடிகொண்டலா மனிகைலா ராவ்
பிடிகொண்டலா மனிகைலா ராவ்

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு காரணமாக பாஜக தலைவர் பிடிகொண்டலா மனிகைலா ராவ் மரணமடைந்தார். 

ஆந்திர மாநிலத்தின் அறநிலையத்துறை முன்னாள் அமைச்சரும், பாஜக தலைவருமான பிடிகொண்டலா மனிகைலா ராவ். இவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டத்தையடுத்து விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். இத்தகவலை அம்மாநில பாஜக தலைவர் வீரராஜூ தனது டிவிட்டரில் உறுதி செய்துள்ளார். இதனிடையே பிடிகொண்டலா மனிகைலா ராவ் மறைவுக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 75,720 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கரோனாவுக்கு இதுவரை மொத்தம் 1,349 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com