அமராவதி: ஆந்திர மாநிலத்தில் இன்று ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 1.50 லட்சத்தை எட்டியது.
ஆந்திரப் பிரதேசத்தில் இன்று புதிதாக 9,276 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 9,276 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,50,209 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரத்தில் இதுவரை மொத்தம் 1,407 பேர் பலியாகியுள்ளனர், 76,614 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 72,188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.