தில்லியில் இன்று புதிதாக 1,118 பேருக்கு கரோனா தொற்று

தலைநகா் தில்லியில் இன்று புதிதாக 1,118 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தலைநகா் தில்லியில் இன்று புதிதாக 1,118 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,36,716-ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம், 1,201 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதையடுத்து, குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1,22,131-ஆக அதிகரித்துள்ளது. 

சனிக்கிழமை ஒரே நாளில் 26 போ் கரோனாவால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 3,989- ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் தற்போது மொத்தம் 10,596 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா்.

கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 496 ஆக உள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com