தலைநகா் தில்லியில் இன்று புதிதாக 1,118 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,36,716-ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம், 1,201 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதையடுத்து, குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1,22,131-ஆக அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை ஒரே நாளில் 26 போ் கரோனாவால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 3,989- ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் தற்போது மொத்தம் 10,596 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா்.
கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 496 ஆக உள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.