புது தில்லி: லோகமன்யா பால கங்காதர் திலகரின் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
“லோகமன்யா திலகரின் 100வது நினைவு தினத்தன்று இந்தியா அவருக்குத் தலை வணங்குகிறது. அவரது சிந்தனைகள், தைரியம், நீதி உணர்வு மற்றும் சுயாட்சி குறித்த யோசனைகள் என்றும் நமக்கு ஊக்கமளிக்கிறது” என்று பிரதமர் தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.