மகாராஷ்டிரத்தில் மேலும் 322 பேர் கரோனாவுக்கு பலி

​மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 9,601 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 9,601 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
​மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 9,601 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 9,601 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்படி, மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,601 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 322 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,31,719 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,66,883 பேர் குணமடைந்துள்ளனர், 15,316 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 1,49,214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மும்பை:

மும்பையில் புதிதாக 1,059 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 45 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,749 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 6,395 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 87,906 பேர் குணமடைந்துள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,560 ஆக உயர்ந்துள்ளது. எனினும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து 72 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com