இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசங்களுக்கு பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்குவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு பிஐஎஸ் தரச்சான்று பெற்ற தலைக்கவசங்கள் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படும்.
இதுகுறித்து அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படும் வகையிலான காயங்களை தவிா்க்கும் விதமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்திய தர நிா்ணயச் சட்டம் 2016-இன் கீழ் தலைக்கவசத்துக்கு பிஐஎஸ் சான்று இருப்பதை கட்டாயமாக்கும் வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பான பொதுமக்களின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை ஒரு மாதத்திற்குள் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.