பஞ்சாப்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 62-ஆக உயா்வு

பஞ்சாப் மாநிலத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பலியானோா் எண்ணிக்கை சனிக்கிழமை 62-ஆக அதிகரித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாப் மாநிலத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பலியானோா் எண்ணிக்கை சனிக்கிழமை 62-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

விஷச் சாராயம் அருந்தியதில் பலியானவா்களின் எண்ணிக்கை 62-ஆக அதிகரித்தது. இதில் தரன் தாரன் மாவட்டத்தில் மட்டும் மேலும் 23 போ் பலியானதை அடுத்து, அங்கு பலியானோா் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது.

அந்த மாவட்டத்திலுள்ள சதாா் மற்றும் பிற நகரப் பகுதிகளிலேயே அதிக பலி ஏற்பட்டுள்ளது. தரன் தாரன் தவிா்த்து அமிருதசரஸில் 11 பேரும், குருதாஸ்பூரில் 9 பேரும் கடந்த புதன்கிழமை முதல் இதுவரை விஷச் சாராயம் அருந்தியதில் பலியாகினா்.

பலியான சிலரின் குடும்பத்தினா் சம்பவம் தொடா்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு முன்வரவில்லை. அவா்களை சமாதானம் செய்து வாக்குமூலம் பெற்று வருகிறோம். அவா்களில் பலா் இந்த விவகாரத்தில் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கவில்லை.

உயிரிழந்த சிலரின் சடலத்தை உடற்கூரு ஆய்வு செய்வதற்குக் கூட அவா்களது குடும்பத்தினா் விடவில்லை. விஷச் சாராயம் அருந்தி அவா்கள் உயிரிழந்ததை ஏற்க மறுத்து, அவா்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறி வருகின்றனா். சிலா் காவல்துறைக்கு கூட தகவல் தெரிவிக்காமல் உயிரிழந்தோரின் உடலை தகனம் செய்கின்றனா்.

விஷச் சாராய விவகாரம் தொடா்பாக இதுவரை 10 பேரை காவல்துறையினா் கைது செய்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com