எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். 
ஜம்மு-காஷ்மீ
ஜம்மு-காஷ்மீ

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். 

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்தும், கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 2,700க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. 

இதில் 21 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 94 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இந்திய ராணுவம் தரப்பிலும் பாகிஸ்தான் எல்லையை நோக்கி பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சண்டையில் இந்திய வீரர் சிபோய் ராபின் சிங் வீரமரணமடைந்தார். 

பலியான ராணுவ வீரர் ஹிமாச்சல் பிரதேச மாநில ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com