தெலங்கானாவின் அமைச்சரவைக் கூட்டம் மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி கூட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு பிரகதி பவனில் தொடங்கும் கூட்டத்தில் புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்டுவது, கரோனா தொற்று பரவல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பொதுமுடக்க காலத்தில் கல்வியைத் தொடர்வது குறித்தும் ஆலோசிக்கப்படடுவதாகத் தெரிகிறது.