தனிமைப்படுத்தலின் போது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி!

ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.  
ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அனந்தபுரம்: ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

இதுகுறித்து தர்மாவரம் காவல்துறை இணை ஆணையர் ரமாகாந்த் கூறிதாவது:

பனி ராஜ் மற்றும் சிரீஷா தம்பதியினருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கான சிகிசசைகள் முடிவடைந்த பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு இருந்த சமயத்தில்தான் நேற்று பின்னிரவு 2.45 மணியளவில் தங்களது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com