சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 4,588 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மாநில அரசின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் மொத்தமாக 5,609 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,021 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக ராணிப்பேட்டையில் 382 பேருக்கும், விருதுநகரில் 348 பேருக்கும், திருவள்ளூரில் 332 பேருக்கும், செங்கல்பட்டில் 331 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 322 பேருக்கும், தேனியில் 303 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..