மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 8,968 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 8,968 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 266 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 10,221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,50,196 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,87,030 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 15,842 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 1,47,018 பேர் சிகிச்சையில் உள்ளனர்.