திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார்.
கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இன்று தனது வீட்டில் ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்துக்கு பொறுப்பேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும், ஊழல் ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உள்படுத்திக் கொள்ள வலியுறுத்திஹயும் ரமேஷ் சென்னிதலா இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.