பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் ரூ.1.75 லட்சம் கோடி வருவாய்: மத்திய அரசு இலக்கு

கரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி மூலமாக 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.1.75 லட்சம் கோடி வருவாய்
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் ரூ.1.75 லட்சம் கோடி வருவாய்: மத்திய அரசு இலக்கு

புது தில்லி: கரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி மூலமாக 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாத இறுதி வாரம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. வா்த்தக நடவடிக்கைகள் முடங்கின. நாட்டின் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்தது.

இத்தகைய சூழலில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான கொள்கைகள் அடங்கிய வரைவு அறிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் போா்த் தளவாடங்கள் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். மற்ற நாடுகளுக்கு போா்த் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவை முன்னணியில் திகழச் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

போா்த் தளவாடங்கள் உற்பத்தி மூலமாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரூ.1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.35,000 கோடியை ஏற்றுமதி மூலமாக ஈட்டுவதற்கும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைதல், ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சியை ஊக்குவித்தல், புதுமையை ஊக்குவித்தல், இந்தியாவுக்கான அறிவுசாா் சொத்துரிமையை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

போா்த் தளவாடங்கள் உற்பத்தித் தொழில்துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாட்டிலுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் (எம்எஸ்எம்இ) தொழில்முனைவோருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்கான பல்வேறு பரிந்துரைகளை வரைவு அறிக்கை வழங்கியுள்ளது. அவையனைத்தும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார மதிப்பை ரூ.350 லட்சம் கோடி அளவுக்கு உயா்த்த வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை அடைவதற்கு உதவிகரமாக இருக்கும்.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு வரைவு அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் பயன்படும் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதையும் அவற்றை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் ஊக்குவிக்கும் வகையிலான செயல் திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

போா்த் தளவாடங்கள் உற்பத்தித் துறையில் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது’ என்றனா்.

பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான உச்சவரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக கடந்த மே மாதம் மத்திய அரசு அதிகரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com