அருணாசலப்பிரதேசத்தில் வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் அருணாசலப்பிரதேச மாநிலம் அமைந்துள்ளது. மாநிலத்தின் தவாங் பகுதியிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் வியாழக்கிழமை காலை 9.46 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.