ஹிமாச்சலப் பிரதேசத்தின் மின்சாரத்துறை அமைச்சர் சுக்ராம் செளத்ரிக்கு காரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றால் செளதாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செளத்ரியின் தனிச்செயலருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.