இந்தியாவில் திட்டமிட்டபடி 2021-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு

இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், நிகழாண்டு நடைபெறவிருந்த
இந்தியாவில் திட்டமிட்டபடி 2021-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு

இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், நிகழாண்டு நடைபெறவிருந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் என்றும் சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்தது.

இதுதொடா்பாக சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாரிய கூட்டத்தை தொடா்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்று பரவலால் ஒத்திவைக்கப்பட்ட நிகழாண்டுக்கான டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் 2022-ஆம் ஆண்டு நடைபெறும் என்பதை ஐசிசி வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடத்தப்படும். நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த மகளிா் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி-மாா்ச் வரை ஒத்திவைக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com