புது தில்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 61,537 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 612 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 42,518 -ஆக அதிகரித்தது.
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 61,537 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 933 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 42,518 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நோய்த்தொற்றுக்காக 6,19,088 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14,27,006பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஆகஸ்ட் 7- ஆம் தேதி வரை 2,33,87,171 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 5,98,778 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிப்பு: 20,88,612
பலி: 42,518
குணமடைந்தோர்: 14,27,006
சிகிச்சை பெற்று வருவோா்: 6,19,088