ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 596 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 51,924-ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே ராஜஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 784-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 13,847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 51,924-ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 6,424 பேரும், ஜோத்பூரில் 7,934 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.