மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கரோனா
மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கரோனா

கரோனாவை குணப்படுத்தும் என அப்பளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சருக்கு கரோனா பாதிப்பு

கரோனாவைக் குணப்படுத்தும் என சில நாள்களுக்கு முன்பு அப்பளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கரோனாவைக் குணப்படுத்தும் என சில நாள்களுக்கு முன்பு அப்பளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஜல்சக்தி மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியது.

இரண்டுமுறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரண்டாவது முறை அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள மெக்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் நிறுவனம் தயாரித்த அப்பளத்தை அறிமுகப்படுத்தியிருந்த அமைச்சர் மெக்வால், “கரோனாவிற்கு எதிராக எதிர்த்து போராட ஆண்டிபாடிகளை உருவாக்க உதவும்.” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com