கர்நாடகத்தில் புதிதாக 4,267 பேருக்கு கரோனா

​கர்நாடகத்தில் புதிதாக 4,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​கர்நாடகத்தில் புதிதாக 4,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
​கர்நாடகத்தில் புதிதாக 4,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


கர்நாடகத்தில் புதிதாக 4,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் ஞாயிறு மாலை 5 மணி முதல் இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணி வரையிலான கரோனா பாதிப்பு நிலவரத்தை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 4,267 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,82,354 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 114 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 3,312 ஆகியுள்ளது. அதேசமயம், 24 மணி நேரத்தில் 5,218 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 99,126 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் அங்கு 79,908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோரில், 681 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com