ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை 2,565 காவலர்கள் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மாநில காவல் தலைமையகம் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை 2,565 காவலர்கள் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் காவல்துறை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர், ஆறு துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள், 25 ஆய்வாளர்கள், 152 துணை ஆய்வாளர்கள், 217 உதவி துணை ஆய்வாளர்கள், 4 முதல்தர குமாஸ்தாக்கள், 178 காவலர்கள் , 1865 ஜவான்கள் மற்றும் ஓட்டுனர்கள், 54 நான்காம் நிலை ஊழியர்கள் மற்றும் 56 ஊர்க்காவலர்கள் அடங்குவர்.
நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் ஆறு பேர் இதன்காரணமாக மரணமடைந்திருக்கின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.