ராகுல், பிரியங்காவுடன் சச்சின் பைலட் சந்திப்பு

​ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் இன்று (திங்கள்கிழமை) காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியைச் சந்தித்தார்.
ராகுல், பிரியங்காவுடன் சச்சின் பைலட் சந்திப்பு (கோப்புப்படம்)
ராகுல், பிரியங்காவுடன் சச்சின் பைலட் சந்திப்பு (கோப்புப்படம்)


ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் இன்று (திங்கள்கிழமை) காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியைச் சந்தித்தார்.

ராஜஸ்தான் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, 2 காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டங்களிலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதல்வர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

மேலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பேரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இதில் நீண்ட பிரச்னைக்குப் பிறகு ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் இன்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியைச் சந்தித்துள்ளார்.

இதுபற்றி தகவலறிந்த காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

"ராகுல் காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நேர்மறையான செய்தியை எதிர்பார்க்கலாம். காங்கிரஸ் தலைமையுடன் சச்சின் பைலட் தொடர்பில் உள்ளார். அவர் மீண்டும் திரும்புவதற்கான யுத்தி வகுக்கப்பட்டு வருகிறது." என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com