கர்நாடகத்தில் புதிதாக 6,257 பேருக்கு கரோனா: மேலும் 86 பேர் பலி

​கர்நாடகத்தில் புதிதாக 6,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
​கர்நாடகத்தில் புதிதாக 6,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  (கோப்புப்படம்)
​கர்நாடகத்தில் புதிதாக 6,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  (கோப்புப்படம்)


கர்நாடகத்தில் புதிதாக 6,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் ஆகஸ்ட் 10-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 6,257 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 86 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம், 6,473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,88,611 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,05,599 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 3,398 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 79,606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 699 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

மொத்தம் 3,32,997 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com