தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,257 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,47,391 ஆக உயர்ந்துள்ளது.
தில்லியில் இதுவரை 1,32,384 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 4,139 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 10,868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 19,440 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 12,23,845 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.