மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"எனக்கு கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் வந்துள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் நாளை வரை தனிமையில் இருக்கவுள்ளேன். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி." என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
கடந்த ஜூலை 25-ம் தேதி சிவராஜ் சிங் சௌஹானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.