கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,212 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன் இதுபற்றி தெரிவித்ததாவது:
"கேரளத்தில் புதிதாக 1,212 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டோரில் 1,068 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றார்.
இதைத் தொடர்ந்து கேரள நிலச்சரிவு பற்றி அவர் பேசியதாவது:
"இன்று மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது." என்றார் அவர்.