மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 12,712 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சமீபத்திய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 12,712 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,48,313 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், மேலும் 13,408 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,81,843 பேர் குணமடைந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கை 18,650 ஆக உள்ளது. இன்றைய தேதியில் அங்கு 1,47,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை:
மும்பையில் புதிதாக 1,132 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,26,371 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,00,070 பேர் குணமடைந்துள்ளனர். 6,940 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 19,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 9 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தாராவிப் பகுதியில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,643 ஆக உயர்ந்துள்ளது. எனினும், வெறும் 87 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,298 பேர் ஏற்கெனவே குணமடைந்துவிட்டனர்.