இந்தியா
மத்திய ஆயுஷ் அமைச்சருக்கு கரோனா உறுதி
மத்திய ஆயுஷ் அமைச்சரும், மத்தியப் பாதுகாப்புத் துறை இணையமைச்சருமான ஸ்ரீபாத் நாயக்-க்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சரும், மத்தியப் பாதுகாப்புத் துறை இணையமைச்சருமான ஸ்ரீபாத் நாயக்-க்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"இன்று கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். எனக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் வீட்டிலேயே தனிமையில் இருப்பதை தேர்வு செய்துள்ளேன். கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள், கரோனா பரிசோதனை செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்." என்றார் அவர்.
கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் 5-வது மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்.