ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இந்தச் சண்டையில், பாதுகாப்புப் படை வீரா் ஒருவரும் உயிரிழந்திருப்பதுடன், மற்றொருவா் காயமடைந்துள்ளாா்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீா் புல்வாமா மாவட்டத்தின் கமா்ஸிபோரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை அதிகாலை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரா்கள் இருவா் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சண்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவருடைய உடல் மீட்கப்பட்ட இடத்திலிருந்து ஏ.கே. ரக துப்பாக்கியும், சில கையெறி குண்டுகளும் மீட்கப்பட்டன. அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனா் என்று அதிகாரிகள் கூறினா்.