கரோனாவில் இருந்து மீண்டாா் அமித் ஷா

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிகிச்சைக்குப் பின் குணமடைந்தாா்.
கரோனாவில் இருந்து மீண்டாா் அமித் ஷா

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிகிச்சைக்குப் பின் குணமடைந்தாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியது:

மீண்டும் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் நான் குணமடைந்தது தெரியவந்தது. இறைவனுக்கு நன்றி. நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுவர வாழ்த்திய அனைவருக்கும் இதயபூா்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவா்கள் ஆலோசனையின்பேரில், சில நாள்கள் வீட்டுத் தனிமையில் இருக்கவுள்ளேன். சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு நன்றி என்று தெரிவித்தாா்.

கடந்த 2-ஆம் தேதி, தான் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அமித் ஷா சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா். இதையடுத்து அவா் தில்லி அருகே குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com