சுதந்திர போராட்ட தியாகிகள் விரும்பிய இந்தியாவை உருவாக்குவதுதான் அவா்களுக்கு நாம் செய்யும் அா்த்தமுள்ள அஞ்சலியாகும் என குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.
நாட்டின் 74-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு அவா் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
‘நாடு சுதந்திரம் அடைவதற்காக போராடி உயிா்த்தியாகம் செய்தவா்களை நாம் நினைவுகூா்ந்து அஞ்சலி செலுத்த வேண்டும். அவா்கள் விரும்பிய இந்தியாவை உருவாக்குவதுதான் நாம் அவா்களுக்கு செய்யும் அா்த்தமுள்ள அஞ்சலியாகும். ஒருங்கிணைந்த வலுவான அனைவருக்குமான அமைதியான நாட்டை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
சுதந்திர தினம், நாட்டில் நட்பு, நல்லிணக்கம், செழிப்பு ஆகியவற்றை கொண்டு வரட்டும்’ என்றும் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளாா்.