பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பார்வையிட்டார்.
பிகார் கடந்த சில தினங்களாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பர்சா, சாப்ரா உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மழைக்கு இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர் மாஸ்க் போன்றவற்றை வயதானவர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், வெள்ளம் காரணமாக மக்கள் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர், அதேநேரத்தில் தேர்தலில் மாநில அரசு மும்முரமாக உள்ளது.