ஆந்திரத்தில் 6,780, கர்நாடகத்தில் 6,317 பேருக்கு கரோனா

​ஆந்திரத்தில் புதிதாக 6,780 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 6,317 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​ஆந்திரத்தில் புதிதாக 6,780 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 6,317 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
​ஆந்திரத்தில் புதிதாக 6,780 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 6,317 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


ஆந்திரத்தில் புதிதாக 6,780 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 6,317 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரம்: 

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,780 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 82 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம், 7,866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,96,609 ஆக உயர்ந்துள்ளது. இதில் 84,777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,09,100 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 2,732 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் புதிதாக 6,317 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பெங்களூருவில் மட்டும் 2,053 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,33,283 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 115 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,062 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை மொத்தம் 1,48,562 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு மொத்தம் 80,643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com