உ.பி.யில் கரோனா நோயாளி தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ராஜேஷ்(42) என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். 

'மருத்துவக் கல்லூரியின் ஆறாவது மாடியில் இருந்து ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு கிராமின் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை 21 அன்று அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜூலை 25 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்' என்று  மொராதாபாத் எஸ்.பி. அமித் ஆனந்த் கூறினார். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com