தில்லியில் புதிதாக 1,945 பேருக்கு கரோனா: மேலும் 15 பேர் பலி

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,945 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.
தில்லியில் புதிதாக 1,945 பேருக்கு கரோனா: மேலும் 15 பேர் பலி
தில்லியில் புதிதாக 1,945 பேருக்கு கரோனா: மேலும் 15 பேர் பலி

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,945 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.

தில்லியில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கரோனா பரிசோதனை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. எனினும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி புதிதாக 1,945 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,71,366-ஆக அதிகரித்துள்ளது. இதில் 14,040 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக 1,449 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,52,922-ஆக அதிகரித்துள்ளது. 7,024 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 15 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,404-ஆக உயர்ந்தது'' என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com