ஹைதராபாத்: தெலங்கானாவில் புதிதாக 2,924 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 2,924 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,23,090-ஆக அதிகரித்துள்ளது. இதில் 31,284 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று (சனிக்கிழமை) மட்டும் 61,148 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 13,27,791 பரிசோதனைகள் செய்யப்படுள்ளன.
மேலும், 90,988 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைவோர் விகிதம் 73.9 சதவிகிதமாக உள்ளது.
புதிதாக 10 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 818-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் 0.66 சதவிகிதமாக உள்ளது. இது தேசிய அளவில் ஒப்பிடும்போது 1.79 சதவிகிதமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 24,176 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.