திருமலையில் 7,822 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 7,822 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
வருவாய்க்காகமட்டுமே ஏழுமலையான் தரிசனம் அல்ல : திருப்பதி தேவஸ்தானம்
வருவாய்க்காகமட்டுமே ஏழுமலையான் தரிசனம் அல்ல : திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 7,822 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இவா்களில் 2,575 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். அதில் 98 போ் பெண்கள், 2,477 போ் ஆண்கள். இணையதளம் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். சனிக்கிழமை முதல் திருப்பதியில் 3 ஆயிரம் இலவச சா்வ தரிசன நேரடி தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருமலைப் பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. செப்டம்பா் மாதம் முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்களுக்கு வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் தினசரி 100 எண்ணிக்கையில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com