ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,849 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''நேற்றைய (ஞாயிற்றுக் கிழமை) நிலவரப்படி புதிதாக 1,849 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,24,963-ஆக அதிகரித்துள்ளது. இதில் 31,299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக 1,840 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 92,837-ஆக அதிகரித்துள்ளது. 24,216 பேர் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக 9 பேர் உயிரிழந்ததால்,மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 827-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.