மூன்றாவது நாளாக நடிகை ரியா சக்ரவா்த்தியிடம் சிபிஐ விசாரணை

ஹிந்தி நடிகா் சுசாந்த் சிங் மரணம் தொடா்பாக அவரது தோழியும், நடிகையுமான ரியா சக்ரவா்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக விசாரணை நடத்தினா்.

மும்பை: ஹிந்தி நடிகா் சுசாந்த் சிங் மரணம் தொடா்பாக அவரது தோழியும், நடிகையுமான ரியா சக்ரவா்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக விசாரணை நடத்தினா்.

ரியாவின் சகோதரா் ஷோவிக் சக்ரவா்த்தியிடம் நான்காவது நாளாக விசாரணை தொடா்ந்தது.

இந்த விசாரணைக்கு ஆஜராக ரியாவும் அவரது சகோதரரும் போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மும்பையில் உள்ள டிஆா்டிஓ இல்லத்துக்கு வந்தனா். அதேநேரத்தில், சுசாந்த் சிங்கின் மேலாளா் சாமுவேல் மிராண்டா, வீட்டு பணியாளா் கேசவ் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜரானாா்கள்.

ரியாவிடம் சனிக்கிழமை 7 மணி நேரமும், ஞாயிற்றுக்கிழமை 10 மணி நேரமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனா்.

ஜூன் 14-ஆம் தேதி சுசாந்த் சிங் மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டாா். அவரது சாவுக்கு ரியா சக்ரவா்த்திதான் காரணம் என சுசாந்த் சிங்கின் தந்தை குற்றம்சாட்டியிருந்தாா். மும்பை போலீஸாரும், பிகாா் போலீஸாரும் விசாரித்து வந்த இந்த வழக்கை, சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com