சர்வதேச பயணிகள் விமான சேவை செப். 30 வரை ரத்து

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை விமான சேவை ரத்து என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். சரக்கு சேவை விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இயங்கி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com