குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூளையில் ரத்தக் கட்டியை அகற்றுவதற்காக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை பின்னடைவை அடைந்து வந்ததை தொடர்ந்து இன்று (திங்கள் கிழமை) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது இறப்பு செய்தி துரதிருஷ்டவசமானது. நாட்டுடன் சேர்ந்து நானும் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
பிரணாப் முகர்ஜியை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்'' என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.