உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் புதன்கிழமை ரிக்டர் அளவில் 2.7 அலகுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மத்திய நில அதிர்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் காலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், எனினும் இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.