ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா கரோனா தொற்று பாதிப்பு காரணமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் ஓம்பிரகாஷ் செளதாலா அவதிப்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா தொற்று பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்ப அவர் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தனது பேரன் திருமணத்தில் அவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.