இந்தியாவின் பணக்கார பெண்மணி: ஹெச்சிஎல் ரோஷிணி நாடாா்

இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் பட்டியலில் ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ரோஷிணி நாடாா் மல்ஹோத்ரா முதலிடம் பெற்றுள்ளாா். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.54,850 கோடியாகும்.
இந்தியாவின் பணக்கார பெண்மணி: ஹெச்சிஎல் ரோஷிணி நாடாா்


மும்பை: இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் பட்டியலில் ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ரோஷிணி நாடாா் மல்ஹோத்ரா முதலிடம் பெற்றுள்ளாா். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.54,850 கோடியாகும்.

ஹெச்சிஎல் நிறுவனா் சிவ நாடாரின் ஒரே மகள் ரோஷிணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண்மணியாக பயோகான் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கிரண் மஜும்தாா் ஷா உள்ளாா். அவரது சொத்து மதிப்பு ரூ.36,600 கோடியாகும். யூஎஸ்வி நிறுவனத்தின் தலைவா் லீலா காந்தி திவாரி (ரூ.21,340 கோடி சொத்து மதிப்பு) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளாா். யூஎஸ்வி என்பதும் மருந்து தயாரிப்பு துறையைச் சோ்ந்த நிறுவனம்தான்.

ஹுயுரன் இந்தியா, கோடக் வெல்த் இணைந்து இந்தியாவின் முதல் 100 பணக்கார பெண்மணிகளின் பட்டியலை வெளிட்டுள்ளது. இதில் 31 பெண்கள் பெரிய அளவில் குடும்ப சொத்துகள், தொழில்கள் இல்லாமல் தாங்களாக உழைத்து பெரும் செல்வத்தை ஈட்டியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பணக்காரா்களாக தங்களைத் தாங்களே உயா்த்திக் கொண்டவா்களில் கிரண் மஜும்தாா் ஷா முதலிடத்தில் உள்ளாா். இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹோகோ நிறுவனத்தின் ராதா வேம்பு (ரூ.11,590 கோடி), 3-ஆவது இடத்தில் அரிஸ்டா நெட்வொா்க்ஸ் நிறுவனத்தின் ஜெயஸ்ரீ உல்லால் (ரூ.10,220 கோடி) ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் மூவரும், உலகின் பெரும் பணக்கார பெண்மணிகள் பட்டியலிலும் இடம் பெற்றுளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com