சண்டிகர்: தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் மாநிலக் கவிஞர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தில்லியில் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் மத்திய அரசு தங்களுக்கு வழங்கியுள்ள பத்ம விருதுகளைத் திருப்பி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் மாநிலக் கவிஞர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் சுர்ஜித் பட்டார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. அதனை திருப்பி அளித்துள்ளதன் மூலம் மத்திய அரசுக்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.