இந்திய மொபைல் காங்கிரஸ் என்ற தொலைத்தொடா்புத் துறையின் 4-ஆவது மாநாட்டை பிரதமா் மோடி டிச.8-ஆம் தேதி தொடக்கி வைக்கிறாா். இந்த மாநாடு காணொலி முறையில் மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இந்திய செல்லுலாா் ஆப்பரேட்டா்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
தொலைத்தொடா்புத் துறை மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த மாநாடு தொலைத்தொடா்புத் துறையின் பன்முகத்தன்மையை விரிவுப்படுத்துவதுடன், இந்த துறையில் அதிக அளவிலான வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும். இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் சஞ்சய் தோத்ரே, ரிலையன்ஸ் நிறுவனத் தலைவா் முகேஷ் அம்பானி, பாா்தி குழும நிறுவனரும், தலைவருமான சுனில் பாா்தி மிட்டல் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா். சுமாா் 210 தேசிய, சா்வதேச பேச்சாளா்களுடன் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது.